தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நாளை மே 8-ம் தேதி திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி மே 8-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதனால், திட்டமிட்டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவுகளை வெளியிட முடியாது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.இது பல்வேறு மேற்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க ஆர்வமுடன் காத்திருந்த மாணவர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நாளை மே 8-ம் தேதி திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது
Fans
Fans
Fans
Fans
Fans